தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள்
தமிழ்நாடு சுற்றுலா
தமிழ்நாடு மாநிலம் வங்காள விரிகுடாவின் கரையோரம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் செழிப்பான பண்டைய நாகரிகத்தின் தொட்டிலாக இருந்த மாநிலம் இன்று வெற்றிகரமாக முன்னேற வழி வகுக்கிறது..
இந்த மாநிலத்தின் புகழ்பெற்ற வ்ரலாறு, 2000 வருடங்களுக்கு மேல் பரவியிருக்கிறது, அது பல பேரரசுகளின் உயர்வு மற்றும் வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது, அதாவது: சேரன், சோழர்கள், பல்லவர்கள் மற்றும் பாண்டியர்கள். ஒவ்வொரு காலமும் அவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் படைப்புகளோடு நிலத்தை வளமை செய்து, மற்றும் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் ஒரு மரபுவழியை விட்டுச் சென்றிருக்கிறது..
சமீபகாலமாக தமிழ்நாடு உலக சுற்றுலா பயணிகள் கவனத்தை ஈர்க்கிறது. பண்டைய கடந்த காலம், தற்போதைய வடிவத்தை தொடர்ந்து எப்படி அமைக்கிறது என்பதைப் பார்க்க தமிழ்நாடுக்கு வாருங்கள்.
நிறைய மக்கள் நொறுங்கும் பழைய கோவில்களில், பொறிக்கப்பட்ட கற்களில் தொன்மங்கள் மற்றும் புனைவுகள் எப்படி உயிருடன் வருகின்றன என்பதைப் பார்க்க தமிழ்நாட்டிற்கு பயணம் செய்கிறார்கள். .மகாபலிபுரம் மற்றும் காஞ்சிபுரத்தில் எப்படி நிபுணத்துவ கைவினைஞர்கள் திட பாறைகளிலிருந்து சுத்த இசையை உருவாக்கினார்கள் என்பதை பார்க்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்.
No comments:
Post a Comment